இலங்கையில் கலவரம் வெடிக்கும் என்பதை கடந்தாண்டே கணித்த நபர்! வைரலாகும் பதிவு



இலங்கையில் கலவரம் வெடிக்கும் என்பதை கடந்தாண்டே நபர் ஒருவர் கணித்துள்ள பதிவு வைரலாகியுள்ளது.

இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்துள்ள நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சா ராஜினாமா செய்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் கலவரம் நடக்கும் என்பதை ஞானேஷகுமார் மந்தராதி என்பவர் கடந்தாண்டே கணித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில்,
சனி மகரத்தில் இருந்து நகர்ந்து கும்பத்தில் இருக்கும் காலம் உலகில் என்னென்ன நடக்கும்?
உயரமான கட்டிடங்கள் விழும், தாவூத் இப்ராஹிம் அழிவு, இலங்கை அதிபர் மரணம், கொலை முயற்சி, கலவரம் என பதிவிட்டுள்ளார்.

அது போலவே தற்போது நாட்டில் சம்பவங்கள் நடக்கிறது.
இன்று அவர் வெளியிட்ட பதிவில், கணித்தபடி இலங்கையில் துல்லியமாக கலவரம் , அதிபர் மீது கொலை முயற்சி , துப்பாக்கி சூடு , பலி , பதவியிழப்பு என எல்லாம் நடந்தது.

அடுத்து இந்தவாராத்தில் இந்தியாவிலும் கலவரம் கிரக நிலையால வரலாம் என பதிவிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.