பயங்கரவாதிகளின் பதுங்கு குழி அழிப்பு | Dinamalar

ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அதில் இருந்த வெடிமருந்துகள், துப்பாக்கிகள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

ஜம்மு – காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச், ரஜவுரி ஆகியவற்றின் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பயங்கரவாதிகளின் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பதுக்கி வைத்திருந்த வெடிமருந்து, துப்பாக்கிகள், குண்டுகள், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள், ஆகியவற்றை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர், பதுங்கு குழியை அழித்தனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.