மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருது- கேசவ் மகாராஜ், அலிசா ஹீலி தேர்வு..!!

துபாய்,
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அண்மைக் காலமாக அறிவித்து வருகிறது.  

அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயரை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்து இருந்தது.
வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் மற்றும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சிமோன் ஹார்மர் ஓமன் பேட்டர் ஜதீந்தர் சிங் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
வீராங்கனைகளுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் நடாலி ஸ்கிவர் மற்றும் உகாண்டா ஆல்-ரவுண்டர் ஜேனட் எம்பாபாசி ஆகியோர் இடம் பிடித்து இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராக தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது. சொந்த மண்ணில் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் கேசவ் மகாராஜ்  16 விக்கெட் விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அதே போல் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.