மரத்தில் லாரி மோதி விபத்து | Dinamalar

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே லாரி மோதியதில் மரம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு கேன்டர் லாரி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை கண்டமங்கலம்

அடுத்த பள்ளித் தென்னல் பஸ் நிறுத்தம் அருகே, சாலையோர மரத்தில் மோதியது. இதில் மரம் அடியோடு உடைந்து சாலையில் விழுந்தது. லாரியின் முன்பக்கம் சேதம் அடைந்தது. டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் தப்பினர். கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி தலைமையிலான போலீசார், மரத்தை வெட்டி அகற்றி போக்கு வரத்தை சரி செய்தனர். இச்சம்பவத்தால் 30 நிமிடம் போக்குவரத்து தடைபட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.