ஐபிஎல்: லக்னோ வெற்றிபெற 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் அணி

மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் இன்று நடைபெறும்  57-வது லீக் ஆட்டத்தில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி குஜராத் அணி முதலின் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக விருத்திமான் சாகாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். 
சாகா 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மேத்தீவ் வேட் 10 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 11 ரன்னிலும், டேவிட் மில்லர் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் 63 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ராகுல் திவாட்டியா 22 ரன்கள் எடுத்தார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.