ஹைதி நாட்டில் 8 துருக்கியர்கள் கடத்தல்| Dinamalar

போர்ட் அவ் பிரின்ஸ்:துருக்கி நாட்டைச் சேர்ந்த எட்டு பேர், ஹைதி நாட்டில் பஸ்சில் சென்று கொண்டிருக்கும்போது கடத்தப்பட்டனர்.
வட அமெரிக்காவில், கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடான ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகரில், பஸ்சில் சென்று கொண்டிருந்த, மேற்காசிய நாடான துருக்கியை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் நிலை பற்றி தகவல் இல்லை.
கடந்த ஆண்டு அக்டோபரில், தலைநகரில் உள்ள தேவாலய ஊழியர்கள் குடும்பத்தினர் 17 பேர் கடத்தப்பட்டனர். கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டதாக கடந்த வாரம், ஹைதி போலீஸ் அறிவித்திருந்த நிலையில் தற்போது எட்டு பேர் கடத்தப்பட்டு இருப்பது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.