திருமணமாகாத விரக்தியில் தந்தையை கொலை செய்த மகன்| Dinamalar

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே திருமணமாகாத விரக்தியில் தந்தையை தாக்கி கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதியைச் சேர்ந்தவர் லுார்துசாமி, 75. இவரது மூத்த மகன் ஜான்சன், 35. இவர் கடந்த 7ம் தேதி மாலை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு லுார்துசாமியிடம் தகராறு செய்து, அவரை தாக்கினார்.படுகாயமடைந்த லுார்துசாமி சிதம்பரம் ராஜா முத்தையா மருத் துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின், மேல் சிகிச்சைக் காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். இது குறித்து லுார்துசாமியின் இளைய மகன் ஜான்பிரிட்டோ கொடுத்த புகாரின் பேரில் ஜான்சன் மீது சோழத்தரம் போலீசார், கொலை முயற்சி வழக்குப் பதிந்தனர்.

இந்நிலையில் லுார்துசாமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, போலீசார் கொலை வழக்காகப் பதிவு செய்து, ஜான்சனை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.