சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற பெண் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியில் நேற்று இரவு அடித்த பலத்த காற்று மற்றும் சாரல் மழை காரணமாக அப்பகுதியில் சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.
image
இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மனைவி சாந்தி (50) சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை பார்த்து அது மின்கம்பி என்பதை அறியால் தனது கையால் அகற்ற முயன்றுள்ளார்.
அப்போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை கண்ட கிராம மக்கள் கே.வி.குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
image
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.