தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவிய அசானி புயல் படிப்படியாக வலுவிழந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் இதன் காரணமாக மத்திய மேற்கு வங்கக் கடல், ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.