ஐஸ்வர்யா ராய் குறித்த கேலிப் பேச்சக்கு பதிலடி கொடுத்தது ஏன்? – தெளிவுபடுத்திய KGF-2 நடிகை!

நடிகை ஐஸ்வர்யா ராய் 2011-ம் ஆண்டு தனது மகள் ஆராத்யா பச்சனைப் பெற்றெடுத்தார். அந்தக் காலங்களில் ஐஸ்வர்யா ராயின் உடல் பருமன் சற்று அதிகரித்திருந்தது. இதனால் அவரின் உடல் பருமன் குறித்தான கேலிப் பேச்சுக்கள் ஊடகங்களில் எழ ஆரம்பித்தன. அப்போது ரவீனா டாண்டன் முன்வந்து “ஐஸ்வர்யா ராய் தற்போது குழந்தை பெற்றுள்ளார். இப்போது அவர் தன் குழந்தைக்காக நேரம் செலவிடுவது முக்கியம், அவரது குழந்தைதான் அவருக்கு முக்கியம். எப்போது என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும்” என்று ஐஸ்வர்யாராய்காக குரல் கொடுத்துப் பேசினார். ரவீனாவின் இந்தச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

ரவீனா டாண்டன், ஐஸ்வர்யா

இந்நிலையில் தற்போது நடிகை ரவீனா டாண்டன் தான் நடித்த ‘கேஜிஎஃ ப்-2’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவாக பேசியது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன, அதற்கு பதிலளித்த ரவீனா, “நான் என் மகனைப் பெற்றெடுப்பதற்கு முன் எனக்கும் உடல் எடை அதிகரித்திருந்தது. பின்னர் நான் என் மகனைப் பெற்றெடுத்தப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினேன். அப்போது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் என் உடல் பருமன் குறித்து என்னை கேலி செய்தார்கள். அதே போன்றுதான் ஐஸ்வர்யா ராயைக் கேலி செய்தார்கள். அதனால்தான் நான் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன்” என்றார். மேலும் ஒன்றைக் குறிப்பிட்டுப் பேசிய ரவீனா, “ஒரு பத்திரிகையாளர் என்னிடம், ‘ரவீனா ஜி உங்கள் உடல் எடை அதிகரித்துவிட்டது. பின் எப்படி நடிக்கப் போகிறீர்கள். ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து கலந்துகொள்வீர்களா?’ என்று கேட்டார். அப்போது நான் அவரிடம் சொன்னேன் “என் உடல் பருமன் சரியாகிவிடும், அதன் பின் உங்கள் முகங்களை எங்கே போய் வைத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்று அவர்களுக்குப் பதிலளித்தேன்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.