குற்றப்பரம்பரை: இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா எடுக்க நினைத்த கதை… வெப்சீரிஸாக இயக்கும் சசிகுமார்!

இயக்குநர்கள் பாரதிராஜாவும், பாலாவும் போட்டி போட்டு தயாரிக்க விரும்பிய கதை `குற்றப்பரம்பரை’ நாவல். இப்போது வெப்சீரீஸாக ரெடியாகி வரப்போகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் பாரதிராஜா ‘குற்றம்பரம்பரை’ நாவலை இயக்கப் போவதாக, படப்பூஜையும் போடப்பட்டிருந்தார். அதில் அவர் ‘என் மக்கள் என் இனம்’ என்று பேசியதும் அப்போது சர்ச்சையானது. இயக்குநர் பாலா கூட, “குற்றப்பரம்பரை ஒரு வரலாற்று பதிவு. அதனை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம்” எனச் சொன்னார். இந்தக் கதையை இயக்குநர் பாண்டிராஜ் கூட இயக்குவதாக பேச்சு எழுந்தது. அவர் இயக்கத்தில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் கூட இந்த நாவலை சூர்யா படிப்பதாகக் காட்டியிருப்பார். அதன்பிறகு பாரதிராஜா நடிப்பில் பிஸியானதால், டைரக்‌ஷனுக்கு பிரேக் கொடுத்துவிட்டார். இயக்குநர் பாலா, இப்போது சூர்யாவை வைத்து இயக்குகிறார்.

வேல்ராஜ்

இந்நிலையில் தற்போது மீண்டும் ‘குற்றப்பரம்பரை’ வரவிருக்கிறது. ஆனால், படமாக அல்ல. வெப்சீரிஸாக வெளிவர இருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிப்பில் சசிகுமார் இயக்கத்தில் ‘குற்றப்பரம்பரை’ வெப் தொடராக வரப்போகிறது. பிரபல ஓ.டி.டி தளம் ஒன்றுடன் இதற்கான ஒப்பந்தமும் ஆகிவிட்டது. தொடரில் சசிகுமாருடன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கிறார். இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானதாக தகவல். படத்திற்கான வசனங்களை இந்த நாவலை எழுதிய வேல.ராமமூர்த்தியே எழுதலாம் என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.