தமிழக கடலோர பகுதிகள் உஷார் நிலை: மத்திய அரசு அறிவுறுத்தல்| Dinamalar

புதுடில்லி: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் வன்முறைக்கு இடையே இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், போதைப்பொருள் கும்பல் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும், தமிழக கடலோர பகுதிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும், இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.