மே 13ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

கோவில் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு வரும் மே 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தேனி மாவட்டம் வீரபாண்டி யில் அமைந்துள்ள கௌமாரியம்மன் திருக்கோயில் நேற்று தொடங்கிய சித்திரை பெருந்திருவிழா 17.05.2022 வரை நடைபெறுகிறது. இத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதால் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவ்விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் எதிர்வரும் சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் விடுமுறை தினத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.