உதவித் தொகை ஆணை வழங்கல்| Dinamalar

புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியில் முதியோர் உதவித்தொகை ஆணையை செல்வகணபதி எம்.பி., அசோக்பாபு எம்.எல்.ஏ., வழங்கினர்.புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம், முதலியார்பேட்டை தொகுதி முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப் பட்டது.

செல்வகணபதி எம்.பி., அசோக்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணையை வழங்கினர்.பா.ஜ., தொகுதி தலைவர் இன்பசேகர், விவசாய அணி தலைவர் புகழேந்தி, இளைஞர் அணி தமிழரசன், மாவட்ட துணைத் தலைவர்கள் குமார், விஜயரங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.