தங்கைக்கு பாலியல் தொல்லை.. அண்ணன் துணிகரம்.. தர்மபுரி அருகே பரபரப்பு..!

தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் நேற்று மாலை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால், பயந்து போன அந்தப் பெண் கூச்சலிட வே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அப்போது ராஜேஷ் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 அதேபோல  ராஜேஷும் சிகிச்சைக்காக வந்ததை கண்ட அந்த பெண்ணின் சகோதரர் அங்கிருந்த ராடால் அவ்ரை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.