ஐபிஎல் : பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெருமை அளிக்கறது -குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா

மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் நேற்று  நடைபெற்ற  57-வது லீக் ஆட்டத்தில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.  
இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று .இந்த தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது .

இந்நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது ;
உண்மையிலேயே எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த பயணத்தை நாங்கள் ஒன்றாக தொடங்கியபோது எங்கள் மீது நம்பிக்கை வைத்தோம்.
ஆனால் 14-வது ஆட்டத்துக்கு முன்பாகவே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது, ஒரு சிறந்த முயற்சி  ,பெருமை அளிக்கிறது. நாங்கள் வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் அழுத்தத்தில் இருந்தோம் என்று நினைக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.