பள்ளிக்கு அருகில் மதுக்கடை திறப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு – நடவடிக்கை எடுக்க உத்தரவு!

பள்ளிக்கு அருகில் மதுக்கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரமேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தென்னம்பாளையத்தில் பள்ளி வளாகத்தில் இருந்து 50 அடி தொலைவுக்குள் மதுக்கடை திறக்கப்பட உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.