“ஐ.நா சபையில் இந்தியை ஊக்குவிக்க 8 லட்சம் டாலர் வழங்கியது இந்தியா” – ஐ.நா சபை

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி மொழியை ஊக்குவிக்கும் வகையில் 8 லட்சம் அமெரிக்க டாலர் தொகையைக் காசோலையாக ஐநா-வுக்கான இந்தியத் தூதர் ரவீந்திரா வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த செய்திக்குறிப்பில், “ஐ.நா சபையில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகிறது. அதனால் கடந்த 2018-ம் ஆண்டு ஐ.நா சபையின் செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகெங்கும் உள்ள இந்தி பேசும் மக்களிடம் கொண்டு சேர்த்து, உலக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு திட்டத்தைத் தொடங்கியது.

ஐ.நா சபை

அதைத் தொடர்ந்து ஐ.நா-வின் செய்திகளை ஒருங்கிணைக்க நிதி வழங்கி ஐ.நா-வின் தகவல் தொடர்புடனும், ஐ.நா-வின் இந்தி முகநூல் பக்கம் மூலம் அனைத்து செய்திகளும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் தற்போது மேலும் இந்தியை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 6,18,14,120.00) வழங்கியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தி மொழி

இந்தியாவின் இந்த முன்னேற்பாடுகளால் 2018 முதல், ஐநாவின் இணையதளம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் சமூக ஊடகக் கையாளுதல்கள் மூலம் ஐநா செய்திகள் இந்தியில் பரப்பப்படுகின்றன. மேலும், ஐ.நா-வின் செய்திகள் குறித்து இந்தி ஆடியோ UN Radio மூலம் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படுகிறது. இதன் இணைய இணைப்பு UN இந்தி செய்தி இணையதளத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.