"இந்த வதந்தியால்தான் என்னால் திருமணம்கூட செய்துகொள்ள முடியவில்லை" – கங்கனா ரணாவத்

கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வாங்கிய நடிகை கங்கனா ரணாவத் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சமீபத்தில் லாக்அப் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதில் தனது வாழ்க்கையில் நடந்த பல கசப்பான விஷயங்களைக் கூறியிருக்கிறாரர். தற்போது அவர் நடிப்பில் `தாகத்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் அப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதில் கங்கனா ரணாவத் உளவாளியாக நடித்துள்ளார். 35 வயதாகும் கங்கனா ரணாவத் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைத்து பேசப்பட்ட கங்கனா ரணாவத் தற்போது தனது திருமணம் குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். சித்தார்த் கண்ணன் என்பவர் கங்கனாவை நேர்காணல் நடத்தினார்.

கங்கனா ரணாவத்

இதில் திரைப்படத்தைப்போன்று நிஜ வாழ்க்கையிலும் பையனைப்போன்றுதான் நடந்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே அப்படிக்கிடையாது, நிஜவாழ்க்கையில் யாரை அடிக்க முடியும். உங்களைப் போன்றவர்கள் பரப்பிவிடும் வதந்தியால் என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்றார்.

நீங்கள் மிகவும் கடினமானவர் என்ற எண்ணம் நிலவுவதால்தான் உங்களால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லையா என்று கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே ஆம், `நான் பசங்களை அடிப்பேன!’ என்ற வதந்தி பரவியிருக்கிறது என்று தெரிவித்தார். இதில் கலந்து கொண்ட நடிகர் அர்ஜூன் ராம்பால் நடிகை கங்கனா ரணாவத் பற்றி கூறுகையில், “கங்கனா ரணாவத் படத்தில் நடிக்கும் கதாபாத்திரம் போன்று நிஜ வாழ்க்கையில் கிடையாது. அவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் இனிமையான, அன்பான, கடவுளுக்கு பயப்படக்கூடியவர். தினமும் பூஜை மற்றும் யோகா செய்யகூடியவர். அவர் உண்மையில் சாதாரண மனிதர்” என்று தெரிவித்தார். தாகத் படம் இம்மாதம் 20ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.