இந்திய விமானப்படை வீரர் கைது| Dinamalar

புதுடில்லி: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு உளவுபார்த்த இந்திய விமானப்படை வீரரை டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்திய விமானப்படையில் பணிபுரிந்த தேவேந்திர சர்மா என்பவர், விமானப்படையின் தகவல்களை பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது மனைவி வங்கிக்கணக்கிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தேவேந்திர சர்மாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.