அரசு , தனியார் துறையினர் முன்னெடுத்த வேலை நிறுத்தம்

அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் பலவற்றினால் முன்னெடுக்கப்பட்ட தொடர் பணிப்புறக்கணிப்பை இன்று காலை 7.00 மணியுடன் முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் என பல துறைகளின் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையும் முடிவுக்கு வந்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை குறைப்பதற்குமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.