பணம் பறிக்க முயற்சி- சண்டிகரில் போலியாக ரெய்டு நடத்திய 4 சிபிஐ அதிகாரிகள் கைது

புதுடெல்லி:
சண்டிகரில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.டி.) பணம் பறிப்பதற்காக போலியாக ரெய்டு நடத்தியது தொடர்பாக நான்கு சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
ரெய்டு நடத்திய அதிகாரிகளின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஐடி நிறுவன ஊழியர்கள் சிலர், அந்த அதிகாரிகளை சுற்றி வளைத்ததுடன், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். 
கைது செய்யப்பட்ட சிபிஐ சப்-இன்ஸ்பெக்டர்களான சுமித்  குப்தா, பிரதீப் ராணா, அன்கூர் குமார் மற்றும் ஆகாஷ் அலாவத் ஆகியோர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.