பிரதமர் பதவியே ஏற்க சஜித் பிரேமதாச நிபந்தனை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளதாக, எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இதற்காக சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

இது தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

* மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதிபர் பதவி விலக வேண்டும்.

* அனைத்து அரசியல் கட்சிகள் ஆதரவுடன் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும்.

*அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்.

* நாட்டில் இயல்பு நிலை திரும்பிய பிறகு, பொதுத்தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.