சென்னை அருகே கைத்தறி பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து.!

தாம்பரம் அருகே தனியாருக்கு சொந்தமான கைத்தறி பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

கௌரிவாக்கத்தில் மன்பிரித் சிங்  என்பவர் நடத்தி வரும் கடையில் வைக்கப்படிருந்த  பஞ்சினால் ஆன பொருட்களில் தீ பற்றியதை அடுத்து ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர்.

சிறிது நேரத்தில் மளமளவென தீ பரவியதால் மேல் தளங்களில் உள்ள பொருட்களும் எரிந்துள்ளன. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயனைப்பு வீரர்கள் தீயினை ஒரு மணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர்.

சேலையூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.