சென்னை அணியை வெளியேற்றி மும்பை அணி அபார வெற்றி!


ஐபிஎல் 15-வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் துடுப்பாட்ட தொடங்கியது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டேவான் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தொடக்கத்தில் டேவான் கான்வே ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மொயீன் அலி ஓட்டம் எதுவும் எடுக்காமலும், ராபின் உத்தப்பா 1 ஓட்டத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் 7 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர்.

சிஎஸ்கே அணியில் இவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது…தோனி உருக்கம் 

சென்னை அணியை வெளியேற்றி மும்பை அணி அபார வெற்றி!

சென்னை அணியில் கேப்டன் தோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் மறுபுறம் களமிறங்கிய வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.

ஒரு சில பந்துகளை மட்டும் பவுண்டரி ,சிக்சருக்கு அனுப்பி டோனி தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

9 விக்கெட்டுக்களை இழந்ததால் 15 ஓவரின் கடைசி பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க முயற்சித்து டோனி ஓடினார், ஆனால் அதில் ஏதிர்முனையில் இருந்த முகேஷ் சௌத்ரி ரன் அவுட்டானார்.

சென்னை அணியை வெளியேற்றி மும்பை அணி அபார வெற்றி!

இறுதியில் சென்னை அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக தோனி 36 ஓட்டங்கள் எடுத்தார். மும்பை அணியில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 98 ஓட்டங்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடியது .தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷான் களமிறங்கனர்.

இஷான் கிஷான் 6 ஓட்டங்களிலும், ரோகித் சர்மா 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த டேனியல் சாம்ஸ் 1 ஓட்டத்திலும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

சென்னை அணியை வெளியேற்றி மும்பை அணி அபார வெற்றி!

ஒரு கட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறுமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்த திலக் வர்மா நிலைத்து நின்று ஆடி 34 ஓட்டங்கள் எடுத்தார்.

மும்பை அணி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை அணியை வெளியேற்றி மும்பை அணி அபார வெற்றி!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.