புதுச்சேரியில் இரவில் வீடு புகுந்து கத்தியால் தாக்கிய வழக்கு… 5 பேர் கைது – 4 கத்திகள் பறிமுதல்!

புதுச்சேரி வானரப் பேட்டையில் இரவு நேரத்தில் வீடு புகுந்து ஒருவரை வெட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாமரை நகரைச் சேர்ந்த கமலஹாசன் மற்றும் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த மஞ்சினி மற்றும் அவரது மனைவி சரளா ஆகியோர் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

கடந்த 9ம் தேதி இரவு கமலஹாசன் வீட்டிற்கு வந்த சரளா மற்றும் அவரது மகன்கள் உள்பட 5 பேர் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென கத்தியை எடுத்து கமலஹாசனை தலை, கை, விலாப்பகுதியில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தப்பிஓடிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.