லண்டனில் பாக்., பிரதமர் சகோதரரை சந்தித்து பேச்சு| Dinamalar

இஸ்லாமாபாத்:பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷரீப், லண்டன் சென்று தன் சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, நிர்வாக சிக்கல்களை குறிப்பிட்டு, ‘பாக்.,கில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்’ என, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் பாக்., பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷரீப், தன் அமைச்சரவை குழுவுடன் தனி விமானத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றார். அங்கு, தன் சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். இந்தப் பேச்சில், பாக்., நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டங்கள் குறித்து, நவாஸ் ஷெரீப் பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘பாக்., பிரதமர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி, மீண்டும் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்’ என, பாக்., தகவல் துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.