தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் தமிழக மருத்துவமனைக்கு ரூ.1.11 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

சென்னை: தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் தமிழக மருத்துவமனைக்கு ரூ.1.11 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளது. செவிலியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் வழங்கப்பட்டது.

அமெரிக்க வாழ் தமிழ் அமைப்புகளிடம் இருந்து, தமிழ்நாட்டின் மருத்துவ சேவைக்காக நிதி திரட்டும் பணியில் தமிழ்நாடு அறக்கட்டளை (அமெரிக்கா) செயல்பட்டு வருகிறத. இந்த அறக்கட்டளை மூலம் வசூலிக்கப்பட்ட தொகையில்,  தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேவை யான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி,2-ம்கட்டமாக 6 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1.11 கோடியில் உபகரணங்கள் வழங்கும் விழா சென்னை மருத்துவக் கல்லூரியில்  நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா கலந்துகொண்டனர்.

இதில், சேலம், சென்னை, செய்யாறு, மதுராந்தகம், உத்திரமேரூர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவ உபகரணங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம், அறக்கட்டளைத் தலைவர் எஸ்.ராஜரத்தினம், தலைமை செயல் அலுவலர் இளங்கோ உள்ளிட்டோர் வழங்கினர். இதுவரை ரூ.9.87 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.