வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம்.!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை உற்சவத்தில் தங்கசப்பர வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி ரங்கசாமி குளம், கீரை மண்டபம், பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த பிரம்மோற்சவம் வரும் 22ஆம் தேதி வரை பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.