துப்பாக்கியை கொடுத்து விட்டு டீ குடிக்கச் சென்ற இரு காவலர்கள் சஸ்பெண்ட்.!

விருதுநகரில், கைதியின் உறவினரிடம் துப்பாக்கியை கொடுத்துவிட்டு டீ குடிக்க சென்றதாக 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இருக்கன்குடி காவல்நிலைய காவலர்களான அன்பரசனும் ஆறுமுகவேலும், சில நாட்களுக்கு முன் ஜான்பாண்டியன் என்ற கைதியை விருதுநகர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, அங்கிருந்த கைதியின் உறவினரான மாடேஸ்வரன் என்பவரிடம் அவர்கள் துப்பாக்கியை கொடுத்துவிட்டு டீ குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அந்த துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்த மாடேஸ்வரன், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து வெளியாட்களிடம் துப்பாக்கியை கொடுத்து அஜாக்கிரதையாக செயல்பட்டதாக இரு காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.