விருத்தாசலம் அருகே பேருந்து மீது லாரி மோதி விபத்து…20 பேர் படுகாயம்!

விருத்தாசலம் அருகே தனியார் பேருந்து மீது சிமெண்ட் கலவை லாரி மோதியதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.

பொன்னேரி புறவழி சாலையில் அமைந்துள்ள 4 முனை சந்திப்பு வழியாக சென்ற தனியார் பேருந்தின் பக்கவாட்டில் சிமெண்ட் கலவை லாரி வேகமாக மோதியது.

லாரி மோதிய வேகத்தில் அந்த பேருந்து சாலை தடுப்பு மீது ஏறி இறங்கியது.

காயமடைந்த 20 பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நான்கு முனை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அங்கு ரவுண்டானா அமைக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.