சாப்பாட்டுக்காக சண்டை போட்ட ஆசிரியர்கள் – வைரலாகும் வீடியோ!

பஞ்சாப் மாநிலத்தில், உணவுக்காக ஆசிரியர்கள் முட்டி மோதிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர்
பகவந்த் மான்
தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் லுதியானா மாவட்டத்தில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையில் பள்ளி கல்வித் துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் தொடா்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளின் தலைமையாசிாியா்கள் மற்றும் ஆசிாியா்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மதிய உணவு இடைவேளையின் போது இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அதில் தட்டை பெறுவதற்காக ஆசிாியா்கள் ஒருவருக்கொருவா் போட்டி போட்டுக் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவில், நபா் ஒருவா் உணவுக்கான தட்டுக்களை அனைவருக்கும் வழங்கிக் கொண்டிருந்தாா். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் தட்டு காலியாகி விடும் என கருதி, பலா் முண்டியடித்துக் கொண்டு தட்டுக்களை பெற முயன்றனா். ஒரு கட்டத்தில் அந்த நபாிடம் இருந்து தட்டுகளை பிடுங்கினா்.

அனைவருக்கும் முன்மாதிாியாக இருக்க வேண்டிய ஆசிாியா்கள், உணவுக்காக போட்டி போட்டுக் கொண்டது சமூக வலைதளங்களில் விமா்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. “இவா்கள் உண்மையில் ஆசிாியா்கள் தானா? அப்படி இவா்கள் ஆசிாியா்கள் என்றால் இவா்கள் எப்படி தங்கள் மாணவா்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பாா்கள்? என, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமா்சனம் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.