மத்திய அரசை விமர்சித்து பாடல்: கமல் மீது போலீசில் புகார்

அரசியலில் தொடர் தோல்விகளை சந்தித்த கமல்ஹாசன் தற்போது சினிமாவில் அதிக அக்கறை காட்டி வருகிறார். அவர் நடித்து வரும் விக்ரம் படத்தின் புரமோசன் பணிகளில் தீவிரம் காட்டுகிறார். இதன் ஒரு பகுதியாக படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கமல்ஹாசனே எழுதி பாடி உள்ளார்.

அந்த பாடலில் “கஜானாலே காசில்லே… கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே… ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே… சாவி இப்ப திருடன் கையில் தில்லாலங்கடி தில்லாலே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் கமல்ஹாசன் மீது புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் கமல் நடித்து விரைவில் வெளியாக உள்ள 'விக்ரம்' திரைப்படத்தில் வரும் 'பத்தல பத்தல' என்ற பாடல் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலில் சாதிய ரீதியான பிரச்னைகளை தூண்டும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளது. எனவே விக்ரம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்க வேண்டும். மேலும், மத்திய அரசை விமர்சித்து பாடல் வெளியிட்ட கமல்ஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.