புதுடில்லி : சர்வதேச அமைப்பு வெளியிட்ட ஊழல் செய்தோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் வீடு, அலுவலகங்களில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, 88.30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் இயங்கும், ‘மொசாக் பொன்சேகா’ என்ற சட்ட நிறுவனம், சர்வதேச அளவில் ஊழல்வாதிகளை அம்பலப்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், தொழில் அதிபர் சஞ்சய் விஜய் ஷிண்டே என்பவர் பெயர் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து, மத்திய பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களில், இவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத் துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதில், 88.30 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் செய்துள்ள முதலீட்டு ஆவணங்களும் சிக்கியுள்ளன; விசாரணை நடந்து வருகிறது.
புதுடில்லி : சர்வதேச அமைப்பு வெளியிட்ட ஊழல் செய்தோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் வீடு, அலுவலகங்களில், அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, 88.30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.