இந்தியாவுக்கு வரும் திட்டத்தை டெஸ்லா நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இறக்குமதி வரியை குறைப்பதற்காக நடவடிக்கைகளில் டெஸ்லா இறங்கியது. ஆனால் அது குறித்து எந்த சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
டெஸ்லா ஷோரூம் அமைப்பதற்காக முடிவை நிறுத்தி இருப்பதாக தெரிகிறது. கடந்த ஓர் ஆண்டாக வரி குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்திருக்கிறது. வரியை குறைப்பதற்கு முன்பு உள்நாட்டில் தயாரிப்பது குறித்து உத்தரவாதம் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து. ஆனால் விற்பனையை பொறுத்தே உற்பத்தி தொடங்கப்படும் என டெஸ்லா அறிவித்தது.
டெல்லி , மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஷோ ரூம் அமைப்பதற்காக பணிகளை தொடங்கியது. ஆனால் தற்போது அந்த பணியை நிறுத்தி இருக்கிறது.. டெஸ்லா கார்களின் ஆரம்பவிலை 40,000 டாலர். இந்திய சந்தைக்கு இந்ததொகை அதிகம் என்பதால் இங்கு ஆலை தொடங்குவதை விட இறக்குமதி செய்துவிற்க டெஸ்லா திட்டமிட்டது. கடந்த பிப்ரவரி பட்ஜெட்டில் இதற்கான மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் இல்லை என்பதால் இந்தியாவில் செயல்படும் திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிகிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM