ஐபிஎல் கிரிக்கெட்: 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்

மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 60வது லீக் போட்டியில் பெங்களூரு  – பஞ்சாப்  அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 
முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் தவான் 21 ரன்களில் ஆட்டமிழந்தார் . 
பானுகா ராஜபக்சே 1 ரன்னுடன் வெளியேற லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். கேப்டன் மயங்க் அகவர்வால் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.  பஞ்சாப்  அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
இதை தொடர்ந்து 210 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணியில்  தொடக்க வீரராக களம் இறங்கிய கோலி 20 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 
கேப்டன் டூபிளியஸ் 10 ரன்னுக்கும், பட்டிதார் 26 ரன்னுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிபட்சமாக மேக்ஸ்வெல் 35 ரன்கள் அடித்தார்.  தினேஷ் கார்த்திக் 11 ரன்னுடன் வெளியேறினார்.
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதையடுத்து  54  ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.