இந்தியாவில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி:
   
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பால் மேலும் 13 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,214 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 79 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 17,692 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.