300 அடி பள்ளம்… நெல்லை கல்குவாரி விபத்தில் மூவர் பலி என தகவல்

நெல்லை பொன்னாக்குடி அருகே கல்குவாரி ஒன்றில், தொழிலாளர்கள் நேற்று இரவு குவாரி பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கிருந்த பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்ததில், 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பள்ளத்தில் சிக்கிய 2 பேர், உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பவைக்கப்பட்டனர்.

மேலும், கல் குவாரியில் சிக்கியுள்ள 4 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மீட்பு பணியில் ஹெலிகாப்டர், ராட்சத இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

இதற்கிடையில், கல்குவாரியில் சிக்கிய 3 பேர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.