அந்தமான் பகுதிகளில் இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.!

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக அந்தமான் பகுதிகளில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு மே 21ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு முன்கூட்டியெ தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல கேரளாவில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இம்மாதம் 27ம் தேதியே தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.