ராஜபாளையம் பால் கூட்டுறவுச் சங்கத்தில் பணம் கையாடல் – காசாளர், மேலாளர் சஸ்பெண்ட்!

விருதுநகர் சரக கட்டுப்பாட்டில் உள்ள ஆர்.56 இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், கடந்த 10-ம் தேதி விருதுநகர் மாவட்ட துணைப்பதிவாளர்(பால்வளம்) நவராஜ் திடீர் கணக்கு தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அதிக கையிருப்பு தொகை வைத்திருந்தது மற்றும் ரொக்க சிட்டாவின்படி கடந்த 10-ம் தேதி ரூ.6,24,415 கையிருப்பு தொகை குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக, அங்கிருந்த காசாளர் வேல்முருகன் மற்றும் கிளை மேலாளர்(பொறுப்பு) தங்க மாரியப்பனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. தொடர் விசாரணையில், கையிருப்பு பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

கூட்டுறவு சங்கம்
கூட்டுறவு சங்கம்

இதையடுத்து ஆர்.56 இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தில் கையிருப்பு பணம் குறைவுக்கு காரணமான காசாளர் வேல்முருகன் மற்றும் கையாடலை கண்டறிந்து தடுக்க தவறிய சங்க மேலாளர் தங்கமாரியப்பன் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து விருதுநகர் துணைப்பதிவாளர் (பால்வளம்) நவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.