குஜராத்தில் லாரி மீது பஸ் மோதல்- 3 பேர் பலி

பாலன்பூர்:

குஜராத் மாநிலம் பனஷ்கந்தா மாவட்டம் பாலன்பூர் நகரில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் ராஜஸ்தானில் இருந்து குஜராத்தின் அகமதாபாத்துக்கு சென்றது.

தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சுக்கு முன்னால் லாரியை டிரைவர் சாலையோரம் நிறுத்த முயன்றார். அப்போது லாரி மீது பஸ் மோதியது. இதில் பஸ்சில் இருந்த 2 பயணிகள், டிரைவர் பலியானார்கள். 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.