தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்

புதுடெல்லி:
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக உள்ள சுஷில் சந்திராவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதற்கிடையே, இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமாரை நியமனம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ராஜீவ் குமார் புதிய தேர்தல் கமிஷனராக 15-ம் தேதி பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 
இவரது தலைமையின் கீழ் 2024 பாராளுமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.