திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா பதவியேற்பு

திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவின் மாணிக் சாஹா பதவியேற்றுக் கொண்டார்.

அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா, புதிய முதலமைச்சருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

திரிபுரா முதலமைச்சராக இருந்த பிப்லப் குமார் தேப் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டார்.

பல் மருத்துவரான மாணிக் சாஹா, திரிபுரா பா.ஜ.க. தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார். அம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.