ஞானவாபி மசூதியில் 2வது நாளாக ஆய்வு :17ம் தேதி அறிக்கை தாக்கல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாரணாசி : வாரணாசி ஞானவாபி மசூதியில் இரண்டாவது நாளாக இன்றும் (மே.15) கள ஆய்வு அமைதியாக நடந்தது.

உத்தர பிரதேசத்தில், வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. அறிக்கையை, 17 ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

latest tamil news

இதையடுத்து, மசூதியில் ஆய்வு பணி துவங்கியது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மசூதியில் இன்றும் ஆய்வு பணி அமைதியாக நடந்தது.

இதுவரை 65 சதவீத ஆய்வுப் பணி முடிந்துள்ளதாக ஆய்வுக் குழுவினர் திட்டமிட்டபடி மே. 17-ம் தேதியன்று சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.