இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்…பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!


இலங்கையில் தனக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் அழுத்தம் நிறைந்த நாட்களாக அமையப் போவதாக புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் கட்டுபடுத்த தவறியதை அடுத்து, இலங்கையில் பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்,  இந்த போராட்டமானது கடந்த திங்கள் கிழமை வன்முறை வெடித்ததை தொடர்ந்து, இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் அடுத்தப் பிரதமர் யார் என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக் பதவியேற்க அழைத்தார்.

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

அதனை ஏற்று கடந்த வியாழன்கிழமை பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, காணொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு சில அறிவிப்புகளை இன்று தெரிவித்துள்ளார்.

அதில் இலங்கையில் தனக்கு அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் அழுத்தம் நிறைந்த நாட்களாக அமையப் போவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போராட்டம் நடத்தும் இளைஞர்களின் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், அவர்கள் மீது எந்தவொரு அடக்குமுறையும் ஏவப்படாது எனவும் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள்...பிரதமர் ரணில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

மேலும் நாட்டின் பொருளாதார சீர்கேட்டை சரிசெய்ய உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரணில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: நோட்டோ தொடர்பான இறுதி முடிவை அறிவித்த பின்லாந்து: ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவு

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் தற்போதைய நிலை குறித்த சிறப்பு அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட இருப்பதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக போராடும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தனி குழு அமைக்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.