நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு ஒதுக்கப்படும் ஆசனம்: பணிகள் ஆரம்பம்


புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் பணிகளை நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார்.

இதனடிப்படையில், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் பக்கத்தில் முதல் வரிசையில் 7வது ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அதே பக்கத்தில் முன் வரிசை ஆசனம் ஒதுக்கப்படவுள்ளது.

மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி என்பதால், கட்டாயம் நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம்  ஒதுக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சி வரிசையில் முன் வரிசையிலேயே ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு ஒதுக்கப்படும் ஆசனம்: பணிகள் ஆரம்பம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.