சென்னை ஆதம்பாக்கத்தில் பெயிண்ட் உள்ளிட்டவை விற்கும் கடையில் தீ விபத்து

சென்னை ஆதம்பாக்கத்தில் பெயிண்ட் உள்ளிட்டவை விற்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது என்பவர், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள், பெயிண்ட் ஆகியவை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று பிற்பகலில் அந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அது மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இதனை அடுத்து 7 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.