புதிய வரலாறு படைத்த இந்திய அணி – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:
புதிய வரலாறு படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இறுதி போட்டியில் இந்தோனேசியாவுடன் மோதிய 3-0 என்ற கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

73 வருடங்களில் முதன்முறையாக தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

புதிய வரலாறு படைத்த இந்திய அணி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்ட்டியில் உண்மையான வரலாற்று வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுத்தந்த வீரர்களுக்கு வாழ்த்து என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.