சாலையில் திராட்சை அள்ளி சென்ற மக்கள்| Dinamalar

மாண்டியா : சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த, திராட்சையை பொது மக்கள் முட்டி மோதி, அள்ளி சென்ற சம்பவம், மாண்டியாவில் நடந்தது.மாண்டியா நகரின், வி.சி.பாரம் கேட் அருகில், நேற்று காலை சாலை ஓரத்தில் கிலோ கணக்கில் திராட்சை கொட்டிக்கிடந்தது. இதை பார்த்த மக்கள், முட்டி மோதி அள்ளிச்சென்றனர்.

பைகள், பிளாஸ்டிக் கவர்களில் நிரப்பி கொண்டு சென்றனர்.விலை சரியும் போது, தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளை, விவசாயிகள் விற்க விருப்பமின்றி, சாலையில் கொட்டியதை பார்த்திருக்கிறோம். ஆனால் திராட்சை விலை கிலோவுக்கு, 70 முதல் 80 ரூபாய் வரை உள்ளது. நல்ல விலை இருந்தும், சாலையில் கொட்டியது ஏன் என்பது, மர்மமாக உள்ளது.டிராக்டரில் வந்த நபர் ஒருவர், 80 கிலோவுக்கும் மேற்பட்ட திராட்சையை, சாலை ஓரத்தில் கொட்டி சென்றதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர். ஆனால் அவர் யார், தரமான திராட்சையை சாலையில் கொட்டினர் என்பது தெரியவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.