ஐபிஎல் 2022: குஜராத், ராஜஸ்தான் அணிகள் வெற்றி

மும்பை:
பிஎல் தொடரில் சென்னை அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.

சென்னை – குஜராத் அணிகள் இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. 134 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வென்றது.

ராஜஸ்தான் – லக்னோ அணிகள் இடையே நடந்த மற்றொரு ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி, 178 ரன்கள் எடுத்தது. 179 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய லக்னோ அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் 24 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோத உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.